Categories
தேசிய செய்திகள்

1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பயிற்சி வீரர்… கை நழுவியதால் அரங்கேறிய கொடூரம்…!!!

1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்த பிரனவ் தார்மாசே என்பவர் மலையேற்ற பயிற்சி வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு தனது நண்பர்களுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அவரின் கை நழுவியது. இதனால் அவர் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பின்னர் இதுகுறித்து மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட பொழுது, மதியம் 2 மணி அளவில் தேவி கோவில் அருகே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்து கிடந்தார். பின்னர் அவரின் உடலை மீட்ட மீட்புப்படையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |