Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 9 முதல் 15ம் தேதி வரை… இந்த கலரில் தான் உடை அணிய வேண்டும்… அதிரடி உத்தரவு…..!!!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 9 நிற உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படும் நவராத்திரியை இந்துக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வருட நவராத்திரி பண்டிகை அக்டோபர் 7 முதல் 15 ஆம் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ராகவேந்திரா நவராத்திரி ஒன்பது நாட்களும் வங்கி ஊழியர்கள் தினசரி ஒரு நிறத்தில் உடை என உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அக். 7 அன்று மஞ்சள் நிற உடை எனத் தொடங்கி, அக். 15 அன்று பர்ப்பிள் நிற உடை என ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட நிற உடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், மாற்றி அணிந்தவர்கள் ரூ. 200 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நவராத்திரிக்கு இந்த நிற உடை தான் அணியவேண்டும்... மீறினால் அபராதம்” : யூனியன் பேங்க் உத்தரவால் அதிர்ச்சி!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |