இன்ஜினியர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.