டெல்லியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் மூன்று பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.
டெல்லியில் உள்ள போர்டிஸ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் அனுமதி பெற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக வாங்கப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் வழங்குவதை கண்காணிக்க நோட்டோ அமைப்பின் மூலம் தகுதியான மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
அதன்படி அதே மருத்துவமனையில் இருந்த 60 வயது பெண் ஒருவருக்கும், டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்த 50 வயது பெண்ணுக்கும், 64 வயது ஆண் ஆகிய மூவருக்கும் கிட்னி, லிவர் தானமாக வழங்கப்பட்டன. இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில்,” இந்த நெருக்கடியான நேரத்திலும் தானம் வழங்க முன் வந்த உறவினர்களுக்கு பெரிய மனது வேண்டும் இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டதே மிகப்பெரும் விஷயம்” என கூறினார்.