Categories
தேசிய செய்திகள்

“சம்பளத்தை உயர்த்தியாச்சு” மாநில அரசின் அறிவிப்பால்…. அரசு ஊழியர்கள் ஹேப்பி…!!!

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஒடிஷாவில் பண்டிகை காலம் தொடங்கி விட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த அறிவிப்பால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்திய நிலையில் தற்போது ஒடிஷா அரசும் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது.

Categories

Tech |