Categories
உலக செய்திகள்

ஆற்றல் மிக்க நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு…. தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.34 மணியளவில் சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவலினை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆற்றல் மிக்க நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா..? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடபடவில்லை.

Categories

Tech |