கேரளாவில் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவரின் மகள் ஐஐடி கான்பூரில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா. இவர் தற்போது ஐஐடியில் தேர்வாகியுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியை அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஐடியில் ஆர்யா தேர்வானது அவரின் தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை என கூறியுள்ளார்.
Heartwarming indeed.
Arya Rajagopal has done her father Sh Rajagopal Ji & indeed all of us associated with the country’s energy sector immensely proud.
This exemplary father-daughter duo are an inspiration & role models for Aspirational New India.
My best wishes.@IndianOilcl https://t.co/eiU3U5q5Mj pic.twitter.com/eDTGFhFTcS— Hardeep Singh Puri (@HardeepSPuri) October 6, 2021
இதைத்தொடர்ந்து இந்திய ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராஜகோபாலின் மகள் ஆர்யாவின் கதையை பகிர்ந்து ஆர்யா ஐஐடி கான்பூரில் நுழைவது எங்களுக்கு பெருமை. ஆர்யாவிற்கு நல்வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளார்.