Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற விழா…. விரதம் இருக்கும் பெண்கள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அம்மனுக்கு நவராத்திரி விழாவும் மற்றும் சிவபெருமானுக்கு சிவராத்திரியும் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 9 நாட்களும் முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சிறப்பு வாய்ந்த விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்பின் நவராத்திரி விழாவில் சுமங்கலிப் பெண்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இதனை அடுத்து இந்த வருடமும் நவராத்திரி விழா வாசவி அம்மன் கோவிலில் தொடங்கப்பட்டு அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகிய பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு விழா நடைபெற்றதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர்.

Categories

Tech |