திருமண நாள் அன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சமந்தா மற்றும் நாகசைதன்யா அவர்களின் 4 வது திருமணநாள் ஆகும்.இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு புகைப்படத்துடன் ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CUtYnBYBhbA/?utm_source=ig_embed&ig_rid=7faff319-b737-431d-afda-ca594825527e
கடந்த வருட திருமண நாளில் நடிகை சமந்தா, ” நான் உன்னுடையவள், நீ என்னுடைய நபர். எந்த கதவு வந்தாலும் நாம் அதை ஒன்றாக திறப்போம். இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கணவர்” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.