ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தீபாவளி, பொங்கல் போல நெரிசலை தவிர்க்க 12, 13 தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து ஆயுதபூஜைக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது..
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் :
தாம்பரத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயிலுக்கு பேருந்துகள் செல்லும் . மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் செல்லும்..
பூந்தமல்லி பேருந்து நிலையம் :
பூந்தமல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் செல்லும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் :
கோயம்பேட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR ), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்)
கொரோனா பரவலை கருதி கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..