லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் முகமது ஜீனத் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து முகம்மது ஜீனத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்ததும் அந்த லாரியின் ஓட்டுனர் தப்பித்து ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் முகமது ஜீனத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பித்து ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.