Categories
உலக செய்திகள்

சிக்கிய முக்கிய பிரபலங்கள்…. சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள்…. பட்டியல் வெளியிட்ட பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு….!!

சட்டத்திற்கு புறம்பாக முதலிடு செய்து வரி ஏய்ப்பு நடத்தியதாக முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம் வகித்த பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக அளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் , திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் சட்டத்திற்கு புறமான  சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 117 நாடுகள் சேர்ந்து 150 ஊடகங்களில் உள்ள 600 பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட இந்தப் பட்டியலானது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலானது  பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்படுள்ளது.

இதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள், அனில் அம்பானி மற்றும் நீர்வ் மோடி உள்ளிட்ட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள்  இடம் பெற்றுள்ளன. மேலும் வரி ஏய்ப்பை முக்கியமாக கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஷிரு, செக் குடியரசு பிரதமர் அண்ட் ரோஸ், பாபீஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிலேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கலும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இவர்கள் வரி ஏய்ப்பு மற்றும் நிதிதொடர்பான  முறைகேட்டில் ஈடுபட்டுஉள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர்கள் வீடுகள் முக்கியமாக கடற்கரைமுகப்பு சொத்து, படகுகள் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதிலும் இந்த பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் பிரிட்டிஷ், விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவில் உள்ள சிலேஸ் தீவு ஷாங்காய் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெளிஸ் உள்ளிட்ட கடல் சார் தீவுகளை தங்களது வசிப்பிடமாக கொண்டு சட்டத்திற்கு புறம்பாக முதலீடுகள் செய்துள்ளதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |