Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீரோடு வாழ்த்துகின்றேன் , கைதட்டுகின்றேன் – வைரமுத்து ட்வீட் ….!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று கவிஞ்சர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 43 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. பள்ளம் தோண்டும் பணியில் 25 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  இயந்திரம் மூலமாக 5 மணி நேரம் துளையிடும் பணி நடைபெற்று வருகின்றது.

சிறுவன் சுர்ஜித் உயிரோடு வர வேண்டும் , பத்திரமாக மீட்க வேண்டுமென்று பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் , இளைஞர்கள் , பொதுமக்கள் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். தேவாலயம் மற்றும் மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்நிலையில் தனது ட்வீட்_டர் பக்கத்தில் குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நீளமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகின்றேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

 

Image

Categories

Tech |