14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் இன்று நடைபெறும் 48 -வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர் .இதில் கேப்டன் விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய டான் கிறிஸ்டியன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் . இதைதொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 40 ரன்னில் வெளியேறினார் .இதனால் பெங்களூர் அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்துள்ளது.