Categories
அரசியல்

அவங்க ஆட்சிக்கு வரதுக்கு…. நாம ஏன் சேவை செய்யனும்…? அன்புமணி ராமதாஸ்;

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பாமக தலைவர் மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏகே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “பாமக கட்சியானது தமிழகத்தில் ஆட்சி செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாகும்.  மேலும் தனித்து தேர்தலில் போட்டியிடுவதை குறித்து எவருக்கும் வருத்தம் உண்டா? நாம் ஏன் பிறர் ஆட்சி செய்வதற்காக சேவை செய்ய வேண்டும்.

இத்தேர்தலில் நாம்  தான் அடுத்த ஆட்சியை கைப்பற்ற உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலிருந்தே இந்த மாற்றமானது ஆரம்பிக்க வேண்டும். எனவே பாமக வானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடும். அண்ணா மாநில சுயாட்சிக் கொள்கை தான்  திமுக ஆட்சியின் கொள்கையாகும். இதுபோல் பாமகவிற்கு மாநில சுயாட்சி தான் கொள்கையாகும். இந்நிலையில் நமது மாநில அதிகாரங்களை கைப்பற்றிக் கொண்டு வருகிறது. இதனை நீட் தேர்வு விவகாரமே உறுதிப்படுத்துகிறது” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |