Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி விபத்துக்குள்ளானத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள மங்கம்மாள்பட்டியில்  கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மாரிமுத்து ஓட்டிச் சென்ற லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |