தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கும் படம் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமான ஒன்றாகத்தான் இருக்கும். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம், தமிழில் இந்தியன் 2, இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் போன்றவை வெளியாகியிருக்கிறது. இதில் ரன்வீர் மற்றும் ராம் சரண் கதாநாயகர்களாக நடிக்க இருக்கும் திரைப்படங்களில் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுதீப் அவர்களிடம் பேசப்பட்டுள்ளது. 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவரிடம் 15 கோடி ரூபாய் தருவதாக கூறியும் சுதீப் இந்த படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனரின் படத்தில் அதிக சம்பளம் கொடுத்தும் சுதீப் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.