ஜெயம் ரவி நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோமாளி. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்க இருக்கும் புதிய படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது அவரது அடுத்த படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. சிறிய படங்களை மட்டுமே தயாரிக்க இருந்த இந்நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.