தமிழகத்தில் தி.மு.க தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அரசின் அலுவல்களை காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் நடைபெறும் வகையில் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது முதல்முறையாக பட்ஜெட்டாக காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல சேவைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், நிலங்கள், நகைகள் போன்ற தகவல்களும் டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டது. இதைப்பற்றி பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து பேசும்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் நோக்கத்தோடு மின்னாளுகை அனைத்து நிலைகளிலும் புகுத்தும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேறி மின் மயமாக்கப்படும்.
மேலும் டேட்டா அனாலிடிக் மெஷின், லேர்னிங் கொள்கை, வகுத்தல், மற்றும் அதனைத் திறம்பட செயல்படுத்துவதற்கான, முடிவுகளை எடுக்க பயன்படும் வகையில் ரூபாய் 10 கோடியில் கொள்கை முடிவுகளில் ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. அதைத் தொடர்ந்து பதிவு துறையையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அதற்காக பிரபல மென்பொருள் நிறுவனம் டிசிஎஸ் உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பொதுமக்களுக்கு சிக்கல் இல்லாமல் எளிதான முறையில் ஆவணங்களை பதிவு செய்யும் வகையில் மேலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பெறுதல் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை எளிதான முறையில் பெறும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து எவ்வாறு பெறுகிறோமோ அதுபோன்று பதிவுத் துறையிலும் மாற்றங்கள் செய்து அதற்கான மென்பொருள் உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.