Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்…. சுவாமி தரிசனம்…..!!!!

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தார். அதன்பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள முகப்புக்கு சென்று கடலில் கால் நனைத்த பின் தரிசனம் செய்தார்.

அதைஅடுத்து அங்குள்ள சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் தெய்வானை, வள்ளி, சண்முகர், மூலவர், போன்ற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருச்செந்தூர் கோவிலில் வள்ளி, தெய்வானை, சண்முகர், மூலவர்  சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

Categories

Tech |