Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு… கணவன் உள்பட 3 பேருக்கு தண்டனை… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய இருவரும் கனகாவிடம் தகராறு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் சண்முகத்திற்கும் கனகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சண்முகம் கனகாவின் தாலி கயிற்றை இறுக்கி அவரை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக சண்முகத்தின் மகன் பிரவீன் குமார் மற்றும் வேன் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சண்முகம், பிரவீன்குமார், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்து மனைவியை கொலை செய்த சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டுள்ளார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரவீன்குமார் மற்றும் வேன் டிரைவர் முருகன் ஆகிய 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார்.

Categories

Tech |