பிரபல நடிகையான சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாக வதந்தி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் மும்பைக்கு இடம் மாற போகின்றீர்களா என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த சமந்தா “நான் ஹைதராபாத்தில் தான் இருக்கப் போகிறேன். எதற்காக இப்படி வதந்திகள் பரவுகிறது என்பது புரியவில்லை. அனைத்தும் பொய் தான்” என கூறியுள்ளார். சமந்தா கூறிய இந்த பதில் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.