Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வலியால் துடித்த சிறுமி… மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் உள்ள நெருஞ்சிபட்டியில் வீரப்பெருமாள் என்பர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 1 மகளும் உள்ளது. இவரது மகள் கலையரசி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த கலையரசி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |