சுவிஸ் விமான நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் SWISS எனும் விமான நிறுவனம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொள்ளாத ஊழியர்கள் விமான பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக எச்சரித்துள்ளது. மேலும் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியினை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்று சுவிஸ் விமான நிறுவனம் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளது.
அதாவது அனைத்து ஊழியர்களும் நவம்பர் மாத மத்தியில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேசமயம் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் தனது பணியினை இழக்க நேரிடும் என்றும் விமான நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே சுவிஸ் விமான நிறுவன ஊழியர்கள் 54 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.