சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற ரவுடி கும்பல் மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வேலு என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறியது, ரவுடி மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் சட்டவிரோதமான ஆயுதங்கள் இருப்பதால் தான் ரவுடிகளால் போலீசார் தாக்கப்படுகிறார்கள் என்று கவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை ஒழிப்பதற்கான மிகக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது டிஜிபி ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் முன்முடிவுகள் தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘திட்டமிட்ட குற்றம் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் வரைவு மசோதா அடுத்த சட்டபேரவை கூட்டத்தில் சட்டமாக இயக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பது குறித்து அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்தனர். இச்சட்டம் இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.