Categories
தேசிய செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு வேண்டும்”… சுப்ரீம் கோர்ட்டில் மனு… இன்று விசாரணை…!!!

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

தமிழ்நாடு பட்டாசு, வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வி கணேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு இணை இயக்குனரிடம் கடந்த 31ஆம் தேதி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் நீரி உருவாக்கிய பசுமை பட்டாசுகளை தயாரிக்க சங்கத்தை சேர்ந்த ஆலைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டதால் சிவகாசியை சுற்றியுள்ள எட்டு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக விரைவாக முடிவெடுக்க உத்தரவிடவேண்டும். பண்பாடு, சமய சடங்குகளை கருத்தில்கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை ஆறு மணி நேரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று எம் ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

Categories

Tech |