பான் மசாலா விளம்பர படத்தில் நடிக்க வேண்டாம் என தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு அமிதாப்பச்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது
புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற விளம்பர படங்களில் பெரிய நடிகர்கள் நடிப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து புகையிலை ஒழிப்பு தேசிய அமைப்பின் தலைவரான சேகர் சால்கார் அமிதாப்பச்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் நேரடியாக வாய் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஒன்றாகும்.
இது வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்களின் இலக்காக தற்போது மாணவர்கள் மாறிவிட்டனர். என் ஜி ஓ வின் உறுப்பினர் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் என்னும் முறையில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் பல்ஸ் போலியோ பிரச்சாரத்திற்கான அரசாங்க பிராண்ட் அம்பாசிடராகவும் அமிதாப்பச்சன் இருப்பதால் அவர் விரைவில் பான்மசாலா விளம்பரங்களில் இருந்து விலக வேண்டும். இந்த நடவடிக்கையை இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாகிவிட்டால் தடுக்க உதவும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.”