இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி கைது செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.. அதன்பிறகு நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.