இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் விளையாட தயக்கம் காட்டியதால் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
அதோடு போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .அதோடு அடுத்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்த போட்டியை நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.