Categories
தேசிய செய்திகள்

பீர் விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு… பிரபல நிறுவனங்களுக்கு ரூ. 873 கோடி அபராதம்…!!!

பீர் விலையை நிர்ணயம் செய்யும் முறையில் முறைகேடு ஏற்படுத்திய வழக்கில் இரண்டு பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூபாய் 873 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பீருக்கு விலை நிர்ணயம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து இந்திய வணிகப் போட்டி ஆணையம் தாமாக முன்வந்து ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. இதன்படி இந்திய வணிக போட்டி ஆணையம் பீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளது .2 நிறுவனங்கள் விதிகளை மீறி விலை நிர்ணயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கை சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரித்த வணிக போட்டி ஆணையம் யுனைட்டட் புரூவரீஸ், கார்ல்ஸ்பர்க் உட்பட இந்தியாவின் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதன்படி இந்திய வணிகப் போட்டி ஆணையம் வெளியிட்ட 231 பக்க உத்தரவில் யுனைட்டட் பிருவரீஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 752 கோடி அபராதமும், காரல்ஸ் ஸ்பர்க் நிறுவனத்திற்கு ரூபாய் 121 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இந்திய பீர் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத்தின் துணையுடன் இந்த முறைகேடு அரங்கேறி இருப்பதால் அந்த அமைப்புக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் ,ஒடிசா ,ராஜஸ்தான் ,டெல்லி மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களிலில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |