Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் லேட்டா வந்திருக்க….? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இருளப்பபுரம் பகுதியில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஜிதா பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக சென்றுள்ளார். இதுகுறித்து அஜிதாவின் தாயார் அவரிடம் விசாரித்த போது தோழியின் வீட்டிற்கு சென்றதால் தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அஜிதாவை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இளம்பெண் கழிவறையில் இருந்த திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அஜித்தாவை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |