Categories
மாநில செய்திகள்

SHOCKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் வாங்கிய விவரங்களை அரசு திரட்டி வருகிறது. அதன்படி தற்போது வரை பலரும் நகை கடன் மோசடியில் சிக்கி உள்ளனர். இதையடுத்து என்னென்ன வகைகளில் நகை கடன் மோசடி நடைபெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்கள் இலட்சக்கணக்கில் பல நகை கடன்களைப் பெறுவது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் பல சங்கங்களில் பல நகைக் கடன்கள் மூலம் கடன் பெறுவது. போலி நகைகள், வாடிக்கையாளரின் கணக்குகளில் நகை கடன் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பித்து வேறு ஒருவர் கடன் பெறுவது உள்ளிட்ட முறைகளில் மோசடிகள் நடந்துள்ளது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |