எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து வரவேற்பு முடிந்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் கிளம்பி சென்ற போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் “முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாளர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர், ஆதரவாளர்கள் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.