Categories
தேசிய செய்திகள்

21 உடன் ஓடிப்போன 19…. உடந்தையாக இருந்த 13…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!!

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காணாமல் போனதை தொடர்ந்து அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 21 வயது வாலிபருடன் ஓடி போனதும், அதற்கு 13 வயது சிறுமி உதவியதும் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வசித்து வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்தனர்.

அப்பொழுது ஓடி போனதற்காக அவ்விருவரையும், மேலும் அவருக்கு உதவியதற்காக 13 வயது சிறுமியையும் மோட்டார் சைக்கிள் டயர்களை கழுத்தில் கட்டி நடமாட சொல்லி தண்டனை கொடுத்தனர். இதனை தொடர்ந்து அம்மூவரையும் ஒருவர் பிரம்பால் அடித்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களில் மூன்று பேரை கைது செய்துள்ளனர். எஞ்சிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |