சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுமென்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், மாதவரம், அண்ணாநகர், கோயம்பேடு, புழல், பூண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் கொட்டி வரும் கனமழையால் நீலகிரி , ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போல சென்னைக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த நிலையில் மழை பெய்து வந்தாலும் சென்னையில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.