கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் 6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்த முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகின்றது. கொரோனா தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அங்கீகாரம் வழங்கும். அந்த குழுவின் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
அதில் இந்த தடுப்பூசியின் சிறப்பம்சங்களை பாரத் பயோடெக் நிறுவனம் விளக்குகிறது. அதனை நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்யும். நிபுணர் குழுவின் உறுப்பினர் ஹன்னா நொகினேக் கோவாக்சின் தொடர்பான வரைவு சிபாரிசுகளை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடத்தப்படும். இறுதியாக நிபுணர்குழு தனது சிபாரிசுகளை அளிக்கும். அதனடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகின்றது. அதன்படி வரும் 6-ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தகவல் தெரிய வரும்.