சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. உணவுப் பொருட்களின் கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.