தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை மதுரையில் இருந்து துபாய்க்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கபட்டுள்ளது. இதையடுத்து மதுரை-துபாய் மற்றும் துபாய்- மதுரை வழி தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
அதன்படி திங்கள்,வியாழன் மற்றும் சனிகிழமைகளில் விமானம் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேரும். அதனைப்போலவே ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிகிழமை ஆகிய நாட்களில் விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு துபாய்க்கு சென்றடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.