தனது மனைவியின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்என்ற இங்கிலாந்து இளவரசரின் விருப்பத்திற்கிணங்க அவர் எழுதிய உயில் தொடர்பாக தலைநகரிலுள்ள ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து இளவரசரான மறைந்த பிலிப்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 30 மில்லியன் பவுண்டுகளாகவுள்ளது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் ராணியின் கணவர் கடந்தாண்டு தன்னுடைய 99 ஆம் அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இதற்கிடையே தான் எழுதிய உயில் தனது மனைவியின் மரியாதைக்காக ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள ஐகோர்ட் நீதிமன்றம் மறைந்த இளவரசர் பிலிப் எழுதிய உயில் தொடர்பாக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது மறைந்த 2 ஆம் எலிசபெத்தின் கணவரான பிலிப் எழுதிய உயிலை சீல் வைப்பதற்கு தலைநகரிலுள்ள ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி 90 ஆண்டுகள் வரை அதனை எவரும் எடுத்து அதிலுள்ள ரகசியத்தை படிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.