Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபின் புதிய முதல்வராக…. சரண்ஜித் சிங்க் தேர்வு…. காங்கிரஸ் அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அம்ரீதர் சிங்குக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார்.

இது குறித்து விளக்கம் அளித்த அவர், எனக்கு தெரியாமல் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பது இது மூன்றாவது முறை. இதனால் பதவி விலக முடிவு செய்தேன். தங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் யாராக இருந்தாலும் கட்சி மேலிடம் முதல்வர் பதவியில் அமர்த்தட்டும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |