Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரா என்ற மகன் உஇருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மகேந்திரன் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

மேலும் நீச்சல் தெரியாததால் மகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |