Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனை அழைத்து சென்ற தந்தை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மகனை அழைத்து சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், யாஷிஹன் மற்றும் யாஷிஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவருடன் கோவபட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி சென்று தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து மனைவியை தேடி வந்த பாலமுருகன் அவரிடம் தகராறு செய்ததோடு மட்டுமில்லாமல் மகன் யாஷிஹனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இதன் காரணத்தால் மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரி வயல் பகுதிக்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |