Categories
தேசிய செய்திகள்

என்னப்பா உஸ் உஸ்ஸுனு சத்தம் வருது…. பீரோவில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… ஓட்டம் பிடித்த ஊழியர்கள்…!!!

வீட்டின் அறையில் இருந்த பீரோவில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபால சுவாமி கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பணியாளர்கள் தங்குவதற்கு ஒரு அறை உள்ளது. வேலையை முடித்துவிட்டு பணியாளர்கள் அங்கு சென்று தூங்குவார்கள். சம்பவம் நடந்த தினத்திலும் பணியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவில் இருந்து உஸ் உஸ் என சத்தம் கேட்டது.

இதையடுத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. இதை பார்த்த ஊழியர்கள் அறையை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர் பீரோவில் இருந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

Categories

Tech |