Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. பெண்கள் திடீரென போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள யூனியன் அலுவலகம் முன்பு பெண்கள் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து சம்பளமாக 600 ரூபாய் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகியான சரோஜா என்பவர் முன்னிலை வகித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் மாநிலத் செயலாளர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 45 பெண்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு தங்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை மனுவாக எழுதி வட்டார வளர்ச்சி அலுவலரான ராம்ராஜிடம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மனுவைப் பெற்றுக் கொண்ட ராம்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னர் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |