ஏஞ்சலா மெர்கல் பதவி காலம் முடிவதை தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு இனிப்பு வழங்க ஜெர்மன் நிறுவனம் முடிவு செய்துள்ளது ..
ஜெர்மனியில் 16 ஆண்டுகள் ஆட்சி புரியும் ஏஞ்சலா மெர்க்கல் இந்த மாதத்துடன் அவரது பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார். இந்த நிலையில் அவரின் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி நல்லதொரு விடை பெற வேண்டும் என்பதற்காக Odenwaelder Marzipan என்ற நிறுவனம் ஏஞ்சலா மெர்கல் முக வடிவில் இனிப்புகள் தயாரித்து வருகிறது.
இந்த இனிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும். மேலும் ஏஞ்சலா மெர்கல் பதவி காலம் முடிவடைந்தாலும் இந்த இணைப்புகள் அவரை நம்மிடையே நினைவூட்டும் என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளரான Thomas Zuber கூறியுள்ளார். அதிலும் இந்த இனிப்பானது எட்டு கட்டங்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த எட்டு கட்டங்களை தயாரிக்க எட்டு பேர் கொண்ட குழு தேவைப்படுகிறது. மேலும் இதனை தயாரிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.