Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராயம் காய்ச்சிய வழக்கில் தப்பி சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அதன்பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் வயலில் வைத்து சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினரை கண்டதும் முருகன் மற்றும் அய்யப்பன் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது பழையனூர் பகுதியில் நின்று கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |