வங்காளதேசத்தில், கொரோனா பரவலால் அடைக்கப்பட்ட பள்ளிகள் 543 நாட்கள் கழித்து இன்று தான் திறக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் 17ஆம் தேதியன்று பள்ளிகள் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், ஒரு வருடம் கடந்த பின்பும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேலும், நாட்டில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே, சுமார் 543 நாட்கள் கழித்து இன்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் அதிக உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு சென்ற காட்சிகள், செய்திகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.