Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற நண்பர்கள்…. நடந்த துயர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவை பகுதியில் கிரண்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த எது என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் எது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனையடுத்து கிரண்பாபுவும் எதுவும் மற்ற 4 பேருடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் முகசிபிடாரியூரில் இருக்கும் தங்களுடைய நண்பர் நரேந்திரன் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் 2 கார்களில் காவிரி ஆற்று தடுப்பணைக்கு சுற்றுலா சென்றனர். அதன்பின் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தபோது கிரண்பாபுவும், எதுவும் மட்டும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் நீச்சல் தெரியாததால் கிரண்பாபுவும், எதுவும் தண்ணீரில் மூழ்கி விட்டார்கள். இதனைத்தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனே அங்கு விரைந்து வந்தனர். அதன்பின் மீனவர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி பார்த்து நண்பர்களான கிரண்பாபு, எது ஆகிய 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நண்பர்கள் 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |