உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது கொத்துக்காடு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இண்டியம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிவாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தார்.
இதனால் அவரது பெற்றோர் ஹரிவாசனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிவாசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.