Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 – 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிக்கை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்குப் பிறகு, கொரோனா சூழலைப் ஆராய்ந்து பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |